தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை...
அது ஒரு பெரும் வலி...!
ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..!
தவறுகளின் பிறப்பிடம்...!
தண்டனையின் உறைவிடம்..!
பிரிவுத்துயர் சொல்லித்தரும்
கலாசாலை..!

கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..!
வெறுமையின் வாசிகசாலை..!
பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..!
வாய் இருந்தும் நாவறுந்ததாய்..
கேள்செவியிருந்தும் செவிடானதாய்...
எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!!

உறவுகள் பிரிந்து....
தனிமையின் பிடியில்.......
கோரமாய் சிக்கிக்கொண்டவன் ......
மனநிலை…!!
தனிமை கொடுமையிலும் கொடுமை ...

&
கவிப்புயல் இனியவன்
சமுதாய கவிதை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்