தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
கவிப்புயல் இனியவன் 2013
---------
தனிமை...
எல்லோருக்கும் கிடைக்காத தவம்...!
அதுவே ஒரு சிலருக்கு வரம்..!
கவிதைகளின் ....
கதைகளின் பிறப்பிடம்...!
கனவுகளின் உறைவிடம்..!
கடந்தகாலத்தை மீள்படிக்க
உதவும் நாற்குறிப்பேடு..!
என்னை நானே உற்றுப்பார்த்திட
வழி செய்யும் கண்ணாடி...!
மெளனத்தின் வழி
பலநூறு கதை சொல்லும் கருவூலம்..!
காதடைக்கும் இரைச்சல்விடுத்து
இதம் சேர்க்கும் தியானபீடம்...!
இது……….
எல்லாம் இருந்தும்….
இளைப்பாற சில பொழுதுகள்
தனிமை சேர்பவன் மனநிலை....!!
தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்