ஒரு ஜீவாத்மாவின் கவிதை 02



ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்