இயற்கை கவிதை

சடைத்து நிற்கும் மரத்தை .......
சற்றே கொஞ்சம் உன்னிப்பாய் .....
பார்த்தேன் .............!!!

இலைகளின்
அசைவில் சிரிப்பொலி.....
உதிர்ந்து விழும் இலையின்....
தியாகம் ......
துளிர்க்கும் இலையின் ....
துடிப்பு ........
மற்றையை இலையோடு.......
உரசும் காதல்.....
ரசித்துக்கொண்டே இருக்கலாம் ....!!!

குடைபோல் நிழல் கொடுக்கும் ......
உழைப்பு......
குருவிகளுக்கு தஞ்சம் கொடுக்கும்.....
அரவணைப்பு.......
முறிந்து விழுந்தாலும் விறகாகும்....
புகழ்.........
கனியை கொடுத்துதவும்.....
அற்புதம்......
தன்னை அழிக்கவருபவனுக்கும்......
உயிர் கொடுக்கும் வள்ளல்.....
 நினைத்துப்பார்த்தால் ........
மரமே கடவுள் என்ற எண்ணம்.....!!!

கெட்டதை உள் வாங்கி......
 நல்லதை வெளிவிடும் அறிவு......
கண்ணுக்கு தெரியாத காற்றை....
உணர்வைக்கும் அழகு......
இத்தனை அற்புதங்களை....
கொண்ட மரத்தை அகுறிணையாக ......
கருதாமல் உயர்திணையாக....
மதிப்போம்.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இயற்கை கவிதை



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்