இதயத்தை ஏன் மென்மையாக படைத்தாய்..?

சிப்பிக்குள் விழுந்த....
மழைத்துளி முத்தாகும் ...
என் கண்ணுக்குள் விழுந்த ....
காதல் ஆனாய் ....
தண்ணீரில் முத்து கரையும் ....
கண்ணீரில் காதல் கரையும் ...!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள் 
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்

@@@

இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய்...
ஏளனம் செய்கிறார்கள்...
ஏமாற்றுகிறார்கள்.....!!!

கையால் ஆகாதவன் என்கிறார்கள்
கோழை என்கிறார்கள்
நான் மென்மையான
இதயத்தில் பிறந்தது
குற்றமா ..?-இல்லை
மற்றவர்கள் -வன் இதயத்தை
கொண்டவர்களா ...?

பொறுத்த மில்லாத -என்
இதயத்தை மாற்று
நானும் சமூகத்தில்
இணைந்து வாழ்வதற்கு ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்