இடுகைகள்

காதல் தோல்வி கவிதைகள்

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

வலி உனக்கே புரியவில்லை...!

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

தேர்தல்

தேர்தல் ----------- மெய்யும் பொய்யும் .... தேர்தலில் போட்டியிட்டன .... மெய்யின் ஆதரவாளர்கள் .... மிகக்குறைவு -பொய்யின் ... ஆதரவாளர்களோ ..... குவிந்து செறிந்து பரந்து ... காணப்பட்டன .....!!! பொய்யின் தேர்தல் ... பிரச்சாரத்தில் பேச்சுகள் .... தூள் பறந்தது கைதட்டல் .... வானை பிழந்து சென்றன .... ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ... எங்களுக்கு வேண்டும் ..... நீங்கள் இல்லாத ஆட்சி ..... எங்களுக்கு வேண்டவே வேண்டாம் .... என்று கோஷமிட்டனர்.....! மெய்யின் பிரச்சாரத்தில்.... ஆங்காங்கே ஒருசிலர் ......!!! தேர்தல் முடிவு வெளியானது ..... பொய் கட்சி அமோக வெற்றி ... மெய் கட்சியினர் கட்டு பணத்தை ... இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் .... பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் .... மெய் கட்சி தலைவர் சிறையில் .... அடைக்கப்பட்டார் ......!!! பொய்களே அரச கொள்கையானது .... லஞ்சமே தேசிய தொழிலானது .... உண்மை பேசியோர் சிறையில் .... அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ... கொடுக்க மறுத்தோர் நாக்கு .... அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ... பொய்பேசியோர் வீடுகளில் .... உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!! ...

காதல் தோல்வி கவிதைகள்

படம்
ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்விக்கவிதைகள்

உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கா "தள்" ஆகிவிட்டது ....!!!

காதல் எனக்கு மட்டும் ... கா "தள்" ஆகிவிட்டது ....!!! காதல் எனக்கு மட்டும் கா " டல் " ஆகிவிட்டது ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நேரம் இருக்கும் போது .... நினைத்து பார்பதற்கு ..... நான் உன் கைகடிகாரம் ... இல்லை ........!!! உன்னை நினைக்கும் .... நேரமே என் நேரம் .... என் மணிக்கூட்டில் .... மணிமுள்ளும் - நீ நிமிட முள்ளும் -நீ ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கனவுகளால் காயப்படுத்துகிறாய் ....!!!

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காத்திருப்பேன் காலம் வரை .

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

வலிகளை சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

ஓரத்தில் அழுதுகொண்டிருகிறது

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் என்னோடு இருக்கிறது

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

காதல் சோகக்கவிதைகள்

படம்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

தந்தை சுமந்த சுமை

உழைப்பின் வலியும் வியர்வையும் நினைவு படுத்தி  வலிக்கிறது   தந்தை சுமந்த சுமை ^ மே தின ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்