இடுகைகள்

SMS அனுப்புங்கள்

நேசிப்பாதாய் மட்டும் ..... இருக்காதே -என்னை ... சுவாசிப்பாதாய் -இரு ...!!! + குறுங்கவிதை SMS அனுப்புங்கள் 

கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே

கெ டுதி கொண்ட உணவுகள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் .... கெ டுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் .... கெ டுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!! கெட்ட  உணர்வால் கெட்டார் கோவலன் .... கெட்ட  எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் ..... கெட்ட  செய்யலால் கெட்டார் ராவணன் .... கெட்ட  நடத்தையால் கெட்டுப்போகாதே ..... கெட்ட வன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!! கெச்சை க்கு தேர் கொடுத்தான் பாரி .... கெட்டி யாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி .... கெம்பி  செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ...... கெக்கலி த்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் .... கெடி யுடன்  கெழி  கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!

நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

என் காதல் வலிகளை.... வார்த்தையால் தர .... முடியவில்லை .....!!! வரிகளாய் தருகிறேன் ....!!! நீ அதை கவிதை என்கிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நீ என்னை எத்தனை முறை .... அடிக்கடி பார்த்திருகிறாய்....? நான் எத்தனைமுறை உன்னை ... பார்த்து கண்சிமிடினேன் ....? வானத்து நட்சத்திரங்கள் .... தான் பதில் சொல்லனும்...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

ஏமாற்றம் அதிகம் ....!!!

ஒரு.... தலை காதலில் .... ஏக்கம் அதிகம் .... இரு...... தலை காதலில் .... ஏமாற்றம் அதிகம் ....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

கனவில் காண விரும்பவில்லை

உன்னை கனவில் காண ..... விரும்பவில்லை உயிரே .... கனவுபோல் களைந்து .... விடகூடாது என்பதால் ....!!! நினைவிலும்  வாழ விரும்பவில்லை ..... தூக்கத்தில் நீ தொலைந்து .... விடுவாய் என்பதற்காக ..... உயிரே உன்னை உயிராய் .... காதல் செய்யவே தவிக்கிறேன் .... உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 15 கவிப்புயல் இனியவன்

உணர்வு தெரியும் உயிரே

உன்  வருகைக்காக தினமும் .... காத்திருக்கிறேன் .... நீ வந்தாயா ..? என்னை .... கடந்து சென்றாயா ,,,,,? யார்கண்டது ....? நிச்சயம் என்னை - நீ  கடந்து சென்றிருக்க மாட்டாய் .... கடந்து சென்றிருந்தால் ..... இதயத்தில் ஒரு பாரம் .... ஏற்பட்டிருக்கும் ..... முகம் தெரியாவிட்டால் என்ன ....? மூச்சுகாற்றின் உணர்வு .... தெரியும் உயிரே ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 14 கவிப்புயல் இனியவன்

மூச்சு உள்ளவரை வாழ்வேன்

ஒருமுறை .... காதல் செய் உயிரே .... மறு ஜென்மம் வரை ... உன்னையே காதல் .. செய்வேன் ......!!! என்னை நிழலாக .... ஏற்றுகொள் உன்னையே .... பின்தொடர்ந்து வருவேன் .... என்னை மூச்சாக ஏற்றுக்கொள் .... உன் மூச்சு உள்ளவரை .... வாழ்வேன் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 13 கவிப்புயல் இனியவன்

உயிரை உருக்குகிறேன்.....!!!

என் கவிதையை ... பார்ப்பவர்கள் என்னை .... காதல் பித்தன் என்கிறார்கள் .... சொல்லிவிட்டு போகட்டும் ... காதலை வார்த்தையாய் .... பார்கிறார்கள் - நான் காதலை .... வாழ்கையே பார்கிறேன் ....!!! எல்லோருக்கும் ..... ஒருநாள் நல்ல பதில் உண்டு .... உன் பதிலில் தான் உண்டு .... உயிரே உன்னை நினைத்து .... உயிரை உருக்குகிறேன்.....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 12 கவிப்புயல் இனியவன்

என்னை ஒருமுறை தேடிவா ....!!!

என் மூச்சு காற்றே .... எனக்கு ஒரு உதவி செய் .... என்னவளின் மூச்சோடு .... கலந்து என்னவளின் இதயத்தில் .... என்னை ஒருமுறை தேடிவா ....!!! முகம் தெரியாமல் காதலிக்கிறேன்.... முகவரி தெரியாமல் அலைகிறேன் .... காதல்  எனக்கு தொழிலில்லை .... காதலே எனக்கு வாழ்கை ......!!! நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் .... விரைவில் வருவாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 10 கவிப்புயல் இனியவன்

நான் கரையோர நண்டு

நான்  கரையோர நண்டு ..... நீ எழுந்து விழும் அலை .... மீண்டும் உள்ளே இழு ...!!! காதல் படகில் தனியே .... பயணம் செய்து என்ன ...? சாதிக்கபோகிறாய்....? பட்டபகலில் .... நிலாபாடல் கேட்கிறாய் .... நடு இரவில் சூரிய உதயம் .... பார்க்கணும் என்கிறாய் ...? + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 890

என்னை காப்பாற்று ....!!!

துடுப்பு  இழந்து தவிக்கிறேன் .... என்னை காப்பாற்று ....!!! காதல் கீதம் பாட .... சொல்லும் நீயே .... காதலை தர மறுக்கிறாய் ....!!! வலிகளால் வலை பின்னி .... வழிதெரியாமல் தடுமாறும் ... காதல் மன்னன் நான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 889

நீ அருகில் வேண்டாம் ....!!!

காதலுக்கு தனி கல்லறை .... அதில் முதல் அங்கத்தவன் .... நான் தான் நீ அருகில் .... வேண்டாம் ....!!! எதற்காக தூண்டிலை .... போட்டு காத்திருகிறாய்...? நான் ஏற்கனவே இறந்த மீன் ....!!! எப்போதும் என் முகவரி  நீ தான் - தயங்காதே  அப்போதே என் முகவரி  தொலைந்து விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 888

புரியாமல் காதலித்து விட்டதே ....!!!

உன்னை காதலித்த ... இதயத்தை பார்த்து .... கவலை படுகிறேன் .... உன் காதல் புரியாமல் .... காதலித்து விட்டதே ....!!! காதல்  நிறைகுடத்தை .... குறைகுடமாக்கும் .... எனக்கு சரிப்பட்டது ....!!! உன் கண் தான் என் .... கவிதை எழுத்து கருவி .... என்னை நன்றாக பார் .... கவிதை அருவியாய் வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 887

என்னை இழப்பேன் ....!!!

நான் வெறும் நூல் .... நீ தான் காற்றாடி .... அசையும் இடமெல்லாம் .... என்னை இழப்பேன் ....!!! இதயத்தில் முள் தோட்டம் ..... விளைந்தது காதல் .... வந்தது முள் வலி ....!!! கஸ்ரப்பட்டு காதல் மழை .... பெய்கிறேன் -நீயோ .... குடைபிடித்து தடுக்கிறாய்...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 886