என் பேனா காத்திருக்கிறது ... உன் வரவுக்காக அல்ல ... கண்ணீருக்காக ....!!! இரும்பு மட்டும் துருப்பிடிப்பதில்லை .... காதலும் தான் ....!!! என் இதயம் மயானம்.... நினைவுகள் சடலங்கள் ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;767
காதலே என் காதலியை .... காப்பாற்று நான் படும் .... வேதனையை அவள் ... அனுபவிக்க கூடாது ....!!! முழு நிலா சந்திர காதல் .... தேய்பிறைக்கு வருகிறது .... உன் முகம் மெல்ல மெல்ல ... என்னை விட்டு மறைகிறது ...!!! காதல் கடலில் நீ ... விழுந்தாலும் நான் ... கட்டுமரமாக இருப்பேன் .... காதலை காப்பாற்ற ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;766
ஏனெடி உனக்கு இன்னும் .... புரியவில்லை நான் ... இதயத்தோடு இருக்கிறேன் ... எத்தனை வலியை அது ... தாங்குமென்று .....!!! உன்னை நேசிக்கவில்லை ... உன்னையே சுவாசிக்கிறேன் ... நான் ஜோசிப்பதெல்லாம் ... என்னை நீ எப்போது நேசிப்பாய் ...? ஒரு முறை ஜோசி உயிரே ....!!!
உன் உண்மையான காதலை ... உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ... வார்த்தை ஜாலம் இல்லை ... உன்னோடு வாழும் வாழ்கை ... காலம் தான் உண்டு ...!!! காதல் வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... வாழ்க்கை வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... மரணம் வேண்டும் அதுவும் ... உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!
உயிரே என்னை காதல் செய்.... உன்னை தவிர யாரும் என்னை ... காயப்படுத்த வேண்டாம் ... காயப்பட்டால் கூட அது ... உன்னால் இருக்கட்டும் ....!!! தோல்வியும் வெற்றியும் ... உன்னால் ஏற்பட்டும் ... அதுவே என் வாழ்க்கையாக ... மாறட்டும் .... என் இதயத்தின் பௌர்ணமியும் அமாவாசையும் நீதான் ...!!!
நானும் ஒரு சாதனையாளன் .... என்னை விட இழப்புகளை ... யாரும் சந்தித்திருக்க முடியாது .... உன்னையும் சேர்த்துதான் .... சொல்கிறேன் .....!!! நினைப்பது போல் நீ .... இருந்திருந்தால் கடலை ... தோண்டி கருவாடு போட்டிருப்பேன் - இப்போ ... நான் கருவாடாகிவிட்டேன் ...!!!
காதல் ஒரு மூச்சு ... வருவது போவதும் ... வழமை ....!!! எனக்கு இறப்பே இல்லை காதலில் உன்னிடம் ... இறந்து விட்டேன் ...!!! அழகான... விண்மீன்கள் ... நம் நினைவுகள் - நான் அழுவது பகலில் ... விண்மீன்கள் ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;765
எங்கே கற்றாய் .... நீ ..... எத்தனை வலியையும்.... தந்துவிடு - காத்திருப்பேன் ... ஆறுதல் சொல்ல நீ தானே ... வருவாய் ....!!! எங்கே கற்றாய் .... இந்த மந்திரத்தை - ஆயிரம் ... வலிகளை தந்துவிட்டு ... ஒரே ஒரு சிரிப்பில் .... குணமாக்குவதை ....!!!